கொரோனா பரவல் அச்சம் காரணமாக போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்த காரணத்தினால் நாடு திரும்ப முடியாமல் சீனா மற்றும் ஓமானில் சிக்கியிருந்தவர்களில் மேலும் 306 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு சீனாவில் சிக்கியிருந்தவ்களில் 10 பேர் ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றிலும், ஓமானில் சிக்கியிருந்தவர்களில் மேலும் 296 பேர் சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றிலும் நேற்று பிற்பகல் (ஓகஸ்ட்-14) கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.
விசேட விமானங்கள் மூலமாக நாடு திருபம்பிய அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா, இலங்கை